சென்னை மாவட்டம் பாரிமுனை அப்பாறவு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு சென்னை மாநகராட்சி நான்காவது மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் முத்துராமன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. முத்துராமன் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் பணம் கொடுத்தால் தலைமை செயலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.

இதனை நம்பி ஜெய்சங்கர் தனது உறவினர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதற்காக முத்துராமனிடம் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து பிப்ரவரி மாதம் அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவை முத்துராமன் ஜெய்சங்கரிடம் கொடுத்தார்.

அதனை வைத்து பணியில் சேர முயன்ற போது அது போலியான பணி நியமன அணை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெய்சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் முத்துராமனை கைது செய்து, தலைமறைவாக இருக்கும் அவரது மனைவி உஷாராணி போலீசார் தேடி வருகின்றனர்.