உத்தரபிரதேசம் கோண்டா மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ஒரு இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக அவரது தலையை மொட்டையடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருவதால், காவல்துறையினர் 11 பேருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர், கோட்வாலி தேஹாட் பகுதியில் உள்ள இமிலியன் மிஸ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு தனியார் மின்சார நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்த இளைஞர், தனது கணவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இழந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தொடர்பை எதிர்த்த அந்தப்பகுதி கிராமவாசிகள், புதன்கிழமை அவர் பெண்ணின் வீட்டுக்கு வந்தபோது அவரை தாக்கியதுடன், அவரைச் சுற்றி வளைத்து தலையை வலுக்கட்டாயமாக மொட்டையடித்தனர். இந்த சண்டையின் வீடியோ வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் முக்தார், இப்ரார் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பலத்தக் கவனத்துடன் எடுத்துக்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்ய  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று கோண்டா மாவட்ட எஸ்பி வினீத் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

தற்போது இந்தக் கொடூர சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களில் பரவும் இந்த வீடியோ, கிராமங்களில் இனியும் இப்படியான தனியாரான விவகாரங்களில் வன்முறை முறையில் தீர்வு காணும் செயற்பாடுகள் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.