ஜார்க்கண்டில் புத்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா(22) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 36 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் சுனிதாவுக்கு தனது கணவருடன் வாழ விருப்பமில்லை. இதனால் தனது வீட்டிற்கு சென்ற சுனிதா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது இரு வீட்டாரும் சேர்ந்து அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சுனிதா தனது கணவனிடம் பூச்செடிகளுக்கு பூச்சி மருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதை நம்பி பூச்சி மருந்து வாங்கி வந்த கணவனுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது சுனிதா தனது கணவன் சாப்பிட இருந்து கறி குழம்பில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுனிதாவை கைது செய்துள்ளனர்.