இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதிலும் சுட்டிக் குழந்தைகளின் வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம் பார்ப்பதற்கு க்யூட்டாகவும் ரசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது ஒரு சிறுவன் ஆசிரியரிடம் எழுந்து நின்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தபோது மற்றொரு குழந்தை ஒருசேரை எடுத்துக் கொண்டு அந்த சிறுவன் கால் மீது வைத்து விட்டது.

உடனடியாக ஆசிரியர்கள் அந்த சிறுவனை அங்கிருந்து தூக்கி சேரை எடுத்தனர். பின்னர் அந்த சிறுவன் எழுந்து நின்ற சிறுவனின் நாற்காலியை எடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். இதை அறியாமல் சிறுவன உட்காரும்போது கீழே விழுந்து விட்டான். சிறுவன் பின்னர் சிரித்துக்கொண்டே அந்த குழந்தை இடமிருந்த சேரை வாங்கிக் கொண்டு அமர்ந்தான். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.