திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவரின் சகோதரரை பெண்ணின் குடும்பத்தினர் கூலிப்படையினரை வைத்து கடத்தினர். இந்த விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

அதன்பிறகு இந்த கடத்தல் சம்பவத்தில் கார் கொடுத்த உதவியதாக ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதன் பிறகு தமிழ்நாடு அரசு அவரை சஸ்பெண்ட் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெற வேண்டும் என கூறியது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு தற்போதைய சூழலில் ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வாபஸ் பெற முடியாது என திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ஜெயராமனின் மேல்முறையீடு தொடர்பான வழக்கில் அவரது சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற முடியாது என தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.