
உத்திரபிரதேசத்தில் மாவட்ட மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்வதற்காக 26 வயதான சர்பராஸ் அகமது என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு டயலசிஸ் சிகிச்சை செய்யப்பட்டிருந்த போது திடீரென மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பாதையில் நின்றது. மருத்துவ மையங்களில் வழக்கமாக திடீர் மின்தடையை சமாளிக்க மின் காப்புப்பிரதிகள் இருக்கும்.
ஆனால் இந்த மருத்துவமனை ஜெனரேட்டரில் எரிபொருள் கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் டயாலிசிஸ் இயந்திரத்தில் சர்பராஸின் இரத்தம் இயந்திரத்தின் உள்ளே இருந்தது. இதனால் அவரது நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஜெனரேட்டர் டீசல் இல்லாததே கரண்ட் கட்டுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.