
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவருக்கு சொந்தமான ஹோட்டல் சென்னை அண்ணாநகரில் இருக்கிறது. அந்த உணவகத்தின் பெயர் Sea shell. இங்கு தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதேபோன்று கெட்டிவாக்கம், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். உணவக அதிகாரிகள் வராததால் அங்குள்ள காவலாளிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. சோதனை நடைபெறுவதற்கான காரணம் என்னும் வெளியாகவில்லை.
மேலும் ஹோட்டலைத் தொடர்ந்து தற்போது தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில் நடிகர் ஆர்யா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ஐடி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஐ டி ரெய்டு நடக்கும் ஹோட்டல் வேறொருவருடையது என்று தெரிவித்துள்ளார்.