
சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்று, அனைவரது நெஞ்சங்களையும் தொடுவதாக உள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் திடீரென ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் விழுகிறார்.
இதனை பார்த்ததும், உடனே அவரது தந்தை தன்னுடைய உயிரைப் பற்றியே யோசிக்காமல், அவரும் கீழே விழுந்து கட்டி அணைத்த படி மகளின் உயிரைக் காக்கிறார். இந்த சம்பவம் நடைபெறும் போது, அதிவேக ரயில் ஒன்று அங்கு நெருங்கி வருகிறது.
Dad shields his daughter with his body after she stepped into a train’s pathpic.twitter.com/Blqs1UISc8
— Interesting things (@awkwardgoogle) June 16, 2025
ரயில் அவர்களுக்கு மிக அருகில் சென்றபோதும், தந்தைக்கும் மகளுக்கும் ஒரு கீறல் கூட ஏற்படவில்லை. அருகில் இருந்தவர்கள் திகைத்து, அலறியபோதும், தந்தையின் துணிச்சலும் செயல்படும் நேர்த்தியும் மகளின் உயிரைக் காப்பாற்றியது.
இந்த வீடியோ முதலில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி எகிப்தின் இஸ்மாயிலியாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சேர்ந்தது என அரபு செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகியுள்ள இந்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது மகளின் உயிரைக் காப்பாற்றிய அதிரடியும், பாசத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டும் தெரிகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “தந்தையின் அன்புக்குப் புது வரையறை இது!”, “உலகின் சிறந்த சூப்பர்ஹீரோ தந்தைதான்” என கருத்து தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் இதுபோன்ற மனித நேயக் காணொளிகள் அடிக்கடி பகிரப்படுவதால், தற்காலிகமான ஊக்கத்தையும், உணர்வுப் பூர்வமான சிந்தனையையும் மக்களிடம் ஏற்படுத்துகின்றன.