தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை 2026 இல் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன். நான் பாஜக ஆட்சி என்று தான் சொல்லுவேன். தேர்தலின் போது கூட்டணியில் உள்ள உள்ளவர்கள் அனைவரும் இணைந்து பேசி எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வார்கள். என்னை பொருத்தவரை பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்.

நான் பாஜகவின் தொண்டன், உயிர் உள்ளவரை இந்த கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் மற்ற கட்சி வளர்ப்பதற்கு நான் அல்ல. கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எங்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமோ அங்கு இருப்பேன். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2026 இல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன் நான் பாஜக ஆட்சி என்று தான் சொல்லுவேன் என்று அண்ணாமலை கூறியதற்கு வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது அண்ணாமலை சொன்னது அவரது தனிப்பட்ட விஷயம். தலைமை எடுக்கும் முடிவே இங்கு நடக்கும். கட்சியின் நிலைப்பாடு எதுவோ அதன்படியே செயல்படுவோம் என்று கூறினார்.