தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடுமாறு அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்கும்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டுக்கு இடையில் 45,800 டிரான்ஸ்பார்மகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் அதன் மதிப்பு 1182 கோடியே 88 லட்சம் ஆகும். இந்த டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்களை லாபம் அடைய செய்யும் விதமாக அரசாங்கத்திற்கு 397 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டதாக கூறி அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதாவது இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது டான்ஜெட்கோவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று வழக்கம் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதிலளிக்குமாறு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.