இந்தியாவில் நேற்று அகமதாபாத்தில் கடந்த விமான விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடந்த மிக முக்கியமான விமான விபத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம். அதன்படி,

கடந்த 1962 ஆம் ஆண்டு ஜூலை ஏழாம் தேதி மும்பையில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா உட்பட 94 பயணிகள் உயிரிழந்தனர்

1973 (மே 31):
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் புயல் காரணமாக உயர் மின் கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.

1976 (அக்டோபர் 12):
மும்பை-சென்னை பயணத்தின்போது 2-வது இயந்திரம் செயலிழந்து, மீண்டும் தரையிறங்க முயன்றபோது விமானம் சிதறி விழுந்ததில் 95 பேர் பலியாகினர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னப்ப நாடார் மற்றும் நடிகை ராணி சந்திரா உட்பட பலர் உயிரிழந்தனர்.

1978 (ஜனவரி 1):
மும்பையில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமானியிடம் கட்டுப்பாடு இழந்து பாந்த்ரா கடற்கரையில் விழுந்ததில் 213 பயணிகள் உயிரிழந்தனர்.

கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர்.

1988 (அக்டோபர் 19):
மும்பையில் இருந்து அகமதாபாத்துக்குச் சென்ற விமானம் தரையிறங்கும் போது மரத்தில் மோதி விழுந்ததில் 133 பேர் உயிரிழந்தனர்.

1990 (பிப்ரவரி 14):
மும்பையில் இருந்து பெங்களூரு செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியானனர்.

1993 (ஏப்ரல் 26):
அவுரங்கபாத்தில் விமான ஓடுபாதையில் டிரக்குடன் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 55 பேர் உயிரிழந்தனர்.

1996 (நவம்பர் 12):
டெல்லிக்கு அருகே, சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் கஜகஸ்தான் விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் 349 பேர் பலியாகினர். இது இந்திய வரலாற்றின் மிகப்பெரிய விமான விபத்து.

2000 (ஜூலை 17):
அலையன்ஸ் ஏர் விமானம், பாட்னாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் 60 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2000 ஆண்டு ஜூலை 22ஆம் தேதி கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட அலையன்ஸ் ஏர் விமானம் பாட்னா அருகே விபத்தில் சிக்கியதில் 60 பேர் உயிரிழந்தனர்.

2010 (மே 22):
துபாயில் இருந்து மங்களூரு வந்த ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விழுந்ததில் 158 பேர் உயிரிழந்தனர்.

2016 (ஜூலை 22):
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-32 விமானம் வங்காள விரிகுடாவில் விழுந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.

2019 (ஜூன் 3):
அருணாச்சலப் பிரதேச மலைப்பாங்கான பகுதியில் விமானம் விழுந்ததில் 13 விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

2020 (ஆகஸ்ட் 7):
துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையைவிட்டு விலகி விழுந்ததில் விமானிகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர்.

மேலும் 2025ஆம் ஜூலை 12-ம் தேதி ஆண்டு  அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 30 வினாடிகளில் விபத்தில் சிக்கியதில் 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர். அந்த விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்ததால் ஏராளமான மருத்துவ மாணவர்களும் இறந்ததாக கூறப்படும் நிலையில் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப்போனதால் டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு முழுமையான இறப்பு குறித்து செய்தி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.