
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கேப்டனாக இருந்தவர் மகேந்திரசிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட் இந்தியா அணிக்கு 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். கேப்டன்ஷிப்பில் மட்டுமின்றி சிறந்த பினிஷராகவும் இருந்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் சாதனை படைத்துள்ள இவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யும் திறமை கொண்டவர். அத்துடன் விராத் கோலி, ரோஹித் சர்மா போன்ற பல இளம் வீரர்களின் திறமைகளை உலகிற்கு கொண்டு வந்தவர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்கி 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனால் இவரது சாதனைகளை கௌரவிக்கும் வகையில் ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் சேர்த்து கௌரவித்துள்ளது. இதற்கு பல முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தனது வாழ்த்துக்களை வித்தியாசமாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தோனிக்கு ஒரு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளது.
அந்த அளவுக்கு வேகமான கைகளை தோனி ஸ்டம்பிங் செய்வதில் கொண்டுள்ளார். நீங்கள் இந்தியாவில் குறிப்பாக அகமதாபாத் போன்ற பெரிய மைதானங்களுக்கு சென்றால் தோனி போன்றவர்கள் உங்கள் பின்னால் இருப்பதை விரும்ப மாட்டீர்கள். உங்களுடைய பணப்பை காணாமல் போய்விடும். அவர் டக்அவுட் ஆனாலும் சரி, உலக கோப்பையை வென்றாலும் சரி அப்படியே இருப்பார். சதத்தை அடித்தாலும் அதே போலவே இருப்பார். இரட்டை சதத்தை அடைத்தாலும் அப்படியே இருப்பார். அவரிடம் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.