
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் எம்.பி பிரியா சரோஜ் என்பவருடன் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் லக்னாவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
மோதிரம் மாற்றி கொள்ளும் போது பிரியா திடீரென கண் கலங்கி அழுத நிலையில் அவரை ரிங்கு சமாதானப்படுத்தினார். அவர்களுக்கு நேற்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அவர்களுக்கு திருமணம் எந்த இடத்தில் நடைபெறுகிறது என்ற தகவல் வெளிவராத நிலையில் அது குறித்து முடிவு செய்யவில்லை என குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
இதில் பிரியாவுக்கு 25 வயது ஆகும் நிலையில் அரசியலில் நுழைவதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றினார். அதன் பிறகு அரசியலில் நுழைந்த அவர் தற்போது சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஆக இருக்கிறார். மேலும் பிரியா மற்றும் ரிங்கு சிங் தம்பதிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.