
ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது பெர்காம்பூர் என்ற கிராமத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதே பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் கலந்து கொண்டனர்.
இந்த சிறுமிகளை அந்த பகுதியைச் சேர்ந்த 4 பேர் திடீரென கடத்தி சென்றனர். அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு சிறுமிகளை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் பின்னர் அங்கிருந்து அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
அந்தப் பகுதியில் இருந்து சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்ட நிலையில் பின்னர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் கூறினர். இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாகப்பட்டினம் பகுதிக்கு தப்பி செல்ல முயன்ற நான்கு குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இது தொடர்பாக கைதானவர்களிடம் விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.