
புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 2026, 2029, 20032 ஆகிய அனைத்து தேர்தல்களிலும் நான் தனித்து தான் போட்டியிடுவேன் என்று கூறினார். இதையடுத்து செய்தியாளர் பாஜக சார்பில் நடத்தப்படும் முருகன் மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
பாஜகவினர் முருகனை ஒப்புக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள். நான் உளமாற தூக்கி பிடிக்கிறேன். நான் தான் முருகனுடைய பேரன், நான் எடுப்பதற்கும் அவர்கள் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பாஜக நேத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி கிடையாது. முருகன் நேற்று வரவில்லை. இவ்வளவு நாட்கள் எடுக்காமல் என்ன செய்தீர்கள். இங்கு முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது.
முருகனைத் தொட்டால் ஓட்டு வருமா என்று நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் அது நடக்காது. முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார். உத்திரபிரதேசத்தில் ராமரை தொடுவார்கள், கேரளாவில் ஐயப்பனை தொடுவார்கள், தமிழகத்தில் முருகனை தொடுகிறார்கள் என்று தெரிவித்தார். பாஜக மக்கள் நல அரசியல் செய்வதில்லை மத அரசியல் செய்கிறார்கள் என்று கூறினார்.