பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனன்யா பாண்டே. இவர் தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் போதிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இவர் பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும்  நிலையில் இவருக்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் கடைசியாக கேசரி சாப்டர் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே தற்போது ஒரு பேட்டியில் நடிகர் ஷாருக்கான் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் ஷாருக்கான் எனக்கு இரண்டாவது அப்பா மாதிரி.

அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ஆகிய இரண்டையும் சிறப்பாக கையாழ்வார். நான் சிறுவயதில் இருக்கும்போது ஆர்யன், சுகானா மற்றும் அப்ராம் ஆகியோருக்கு எவ்வளவு அருமையான தந்தையாக இருந்தார் என்பதை பார்த்துள்ளேன்.

அவர் உங்களிடம் பேசினால் நீங்கள்தான் இந்த உலகத்தில் உள்ள ஒரே ஒரு நபர் என்று உணரும் அளவுக்கு செய்வார். அவர் என்னுடைய சிறந்த தோழியின் அப்பாவாக இருக்கிறார். மேலும் நாங்கள் எல்லா ஐபிஎல் போட்டிக்கும் அவருடன் செல்வம் என்று கூறினார்.