சமீபகாலமாக தெருக்களில் மாடுகள் செய்யும் அசம்பாவித சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்தவகையில்  சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரையும் ஒரு மாடு திடீரென தானாகவே சென்று முட்டி நடுரோட்டில் இழுத்து போட்டு பயங்கரமாக தாக்கியது. அவர் தப்பி செல்லம் என்ற போதிலும் அவரை இழவிடாமல் மிதித்து கொம்பால் முட்டி தாக்கியது.

இதனை தடுக்க வந்த ஒரு பெண்ணையும் அந்த மாடு முட்டிய நிலையில் இரண்டு நாய்களும் அந்த மாடுகளை நோக்கி குரைத்தது. இருப்பினும் அந்த மாடு விடாமல் அந்த நபரையும் தடுக்க வந்தவர்களையும் தாக்கிய நிலையில் பின்னர் ஒருவர் கம்பால் அந்த மாட்டை அடித்து விரட்டினார். பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.