
உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் நிகழ்ந்த திருமணம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில், மைத்துனரும் அண்ணியும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் மஹுலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிஹர்பூர் நகர் பஞ்சாயத்து தலைவர் அலுவலகத்தில் நடந்தது. அந்தப் பெண்ணின் கணவர் திருமண நிகழ்வில் இல்லை என்றும், திருமணத்தில் இருவரது குடும்பத்தினரும், பஞ்சாயத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதாவது ஹரிஹர்பூரில் வசிக்கும் ஒரு இளைஞர், ஆறு மாதங்களுக்கு முன்பு கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, ஒருமாத காலம் மனைவியுடன் வாழ்ந்த அவர், பின்னர் பணிக்காக மும்பை சென்றார். இவரது இல்லாத நேரத்தில், மனைவி தனது மைத்துனருடன் தொடர்பு கொண்டார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டு நெருக்கமான உறவில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் ரகசியமாக சந்திக்கத் தொடங்கினர்.
இந்த உறவை எதிர்த்து, குடும்ப உறுப்பினர்கள் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இருவரும் பிடிவாதமாக இருந்து, வீட்டை விட்டே ஓடி விட்டனர். குடும்பத்தினர் இருவரையும் மீண்டும் அழைத்து வந்தாலும், அவர்கள் ஒன்றாகத்தான் இருப்போம் என உறுதியாக தெரிவித்தனர். பஞ்சாயத்து தலைவர் ரவீந்திர பிரதாப் ஷாஹியின் தலைமையில் சமாதானம் செய்ய முயற்சி செய்யப்பட்டதாலும், இருவரும் மாற்றமின்றி ஒருவரையொருவர் திருமணம் செய்வதாக கூறினர்.
இதனைத் தொடர்ந்து, முகாம் அலுவலகத்திலேயே மைத்துனர் தனது அண்ணனின் மனைவிக்கு சிந்தூரம் இட, அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மனைவியின் முன்னாள் கணவர், இந்தத் திருமணத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணம் ஆன ஆறு மாதத்தில் கணவனை விட்டுவிட்டு அவரது தம்பியை பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.