
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி குரூப்-1, குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகள் மூலம் அரசு பணிகள் நிரப்பப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் குரூப்-1 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான தேதி வெளியானது. இந்த தேர்வுகள் மூலம் மொத்தம் 70 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன்படி முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று வகையாக தேர்வுகள் நடைபெறும் நிலையில் ஜூன் 15ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்த தேர்வு காலை 9:00 மணி அளவில் தொடங்கும் நிலையில் தற்போது ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தற்போது குரூப்-1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ள நிலையில் தேர்வர்கள் tnpscexams.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஹால் டிக்கெட் மிக முக்கியம் என்பதால் தேர்வுகள் உடனடியாக இதை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.