
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹீராமன் துர்வே (65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் திலீப் துர்வே (35) என்ற மகன் இருக்கிறார்கள். இதில் ஹீராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் குடிப்பதற்காக மது பாட்டில்களை வாங்கி வைத்துள்ளார். இதனை அவரது மகன் திலீப் எடுத்து ஆசை தீர குடித்த நிலையில் வீட்டிற்கு வந்த அவர் மது பாட்டில்கள் காலியாக இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.
இது பற்றி தன் மகனிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியது. ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனையே ஒரு மரத்தின் கம்பால் தலையில் ஓங்கி அடித்தார் ஹீராமன். ஏற்கனவே குடிபோதையில் இருந்த திலீப் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
இது தொடர்பாக திலீப்பின் மனைவி ராஜ்குமாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் எந்த வேலைக்கும் போகாத திலீப் மது பழக்கத்திற்கு அடிமையானது தெரிய வந்தது.
மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.