
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, த்ரிஷா மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தக்லைப் திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தக்லைப் திரைப்படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சி வெளியிட அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி நாளை காலை 9:00 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தம் ஐந்து காட்சிகளை திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தக்லைப் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.