
கரூர் மாவட்டத்தில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகி அம்சா (35) என்ற மனைவி இருக்கிறார். இவரது வீட்டின் அருகே சிவக்குமார் (35) ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அம்சா மற்றும் சிவக்குமார் இடைய கடந்த 5 வருடங்களாக பழக்கம் இருந்த நிலையில் அது கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் சம்பவ நாளிலும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது இரவு வேலை முடிந்து ரமேஷ் வீட்டிற்கு வந்த நிலையில் தன்னுடைய மனைவியும் சிவக்குமாரும் ஒன்றாக இருப்பதை பார்த்தார். இதைப் பார்த்து ரமேஷ் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் ரமேஷ் மற்றும் சிவகுமார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. பின்னர் கோபத்தில் ரமேஷ் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சிவக்குமாரை அடித்தார்.
அவர் கோபத்தில் தலை உட்பட உடம்பின் பல இடங்களில் அடித்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.