திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள ஆட்டு சந்தை மிகவும் பிரபலம் வாய்ந்தது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையில் ஏராளமான பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல விற்பனைக்காக பல ஆடுகள் கொண்டுவரப்பட்டது. பக்ரீத் பண்டிகை வர உள்ளதால் இன்று ஒரு நாள் மட்டுமே ஏறக்குறைய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சந்தைக்கு மதுரை ,திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் சாரணர்பட்டி, கோபால்பட்டி, செந்துறை, கொட்டாம்பட்டி, நத்தம் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட  ஒவ்வொரு ஆடுகளும் எடைகளுக்கு ஏற்ப 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆடும் ஆயிரம் முதல் 5000 வரை கூடுதல் விலைக்கு விற்பனையானதால் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்றைக்கான ஆட்டுச்சந்தையில் இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 5 கோடிக்கு மேலாக ஆடுகள் விற்பனையானதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.