
பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் நிலையில் மாநிலத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு எடுத்துரைப்பார்கள்.
தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறி கடந்த வருடம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்தை போன்று தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளையும் தூய்மைப்படுத்தும் திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும் இந்த திட்டங்களுக்கும் எல்லாம் ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என்று தெரிவித்தார்.