
கோட்புட்லி-பேஹரோட் மாவட்டம், விராட்நகர் பகுதியில் மனிதாபிமானத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது லிலோ கா பாஸ் கி தாணி கிராமத்தில், வயதான ஒரு பெண் இறந்ததையடுத்து நடந்த இறுதிச் சடங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சொத்து தகராறில், அவரது இரு மகன்களில் ஒருவர் தாயின் பிணத்தின் மேல் ஏறி அமர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த பெண்ணின் உடலுக்கு கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைத் தயார் செய்து கொண்டிருந்த போது, அவரது இரு மகன்கள் தாயின் சொத்தான ஒரு வெள்ளி வளையளுக்காக கருத்துவேறுபாடில் ஈரப்பட்டனர். இதனிடையே, ஒருவர் சடங்கை நடத்திய இடத்தில் நேரடியாக பிணத்தின் மீது படுத்துக்கொண்டு, “வெள்ளி வளையல் எனக்குக் கிடைக்காத வரை சடங்கு நடைபெற முடியாது” என்று கூறினார்.
இதை கண்ட சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பலமுறை அவனை சமாதானப்படுத்த முயன்றும், அவர் எந்த வார்த்தையையும் கேட்க மறுத்துள்ளார்.இ து அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இறுதியாக இறுதி சடங்கு அவர் ஒப்புக்கொண்டு தாயின் சடலத்தில் இருந்து எழுந்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.