ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீரஜ்(37). இவர் தனியார் நதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி தீரஜ்க்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தீரஜ் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் தீரஜ், அவரது மனைவி, தீரஜ்ஜின் சகோதரி அலேக்கியா, அவரது குழந்தைகள் தனுஷ், அம்சவிக்கா, மற்றொரு சகோதரி லட்சுமி, அவரது கணவர் நவீன், மகள் ஜான்விகா ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பாபுலபாடு அடுத்த வீரவல்லி பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் தீரஜ் சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீரஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.