
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்குத்தானே சிலை வைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபர் டிரம்ப் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் அதிபர் ட்ரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக தனக்குத்தானே சிலை வைத்துள்ளார். ஓவல் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள அந்த சிலையின் புகைப்படத்தினை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “தனக்குத்தானே அதிபர் டிரம்ப் சிலை வைத்துள்ளார்” என்று நெட்டிசன்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.