இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

இது பற்றி விமானப்படை அதிகாரி ஏ.கே பாரதி கூறும் போது, அலை அலையாக ட்ரோன்களை ஏவி பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது. அவைகளை வெற்றிகரமாக இடைமறித்து இந்த தாக்குதலை இந்தியா முறியடித்தது. நாம் தீவிரவாதிகளை மட்டும் தான் குறி வைத்து தாக்கினோம்.

ஆனால் பாகிஸ்தான் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்றார். மேலும் குருத்வாரா மற்றும் கோவில்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகினர் என்றும் கூறப்பட்டுள்ளது.