
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியதாக கூறப்படும் நிலையில் பிசிசிஐ அவருடைய முடிவை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மீண்டும் ஒருமுறை விராட் கோலி இந்த முடிவை வாபஸ் பெறுவது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.