
பெங்களூருவில் ஒரு கணவன் மனைவி இடையே பூனையால் குடும்பத்தார் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனைவி, தனது கணவர் செல்லப் பூனையை தன்னை விட அதிகமாக நேசிப்பதாக குற்றம்சாட்டி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A-ன் கீழ் வழக்கு பதிவு செய்தார். வழக்கில், “பூனை அடிக்கடி என்னைச் சொறிந்து விடுகிறது, கணவர் அதை மட்டும் பராமரிக்கிறார்; எனது உணர்வுகள், தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன” என்று மனைவி தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா, “இது வழக்கமான கொடுமை வழக்கல்ல, உணர்வுப் பூர்வமான குடும்ப முரண்பாடு” என்று விளக்கம் அளித்தார். மேலும், குற்றப்பத்திரிகையில் “மற்றொரு பெண்” என்று குறிப்பிடப்பட்டதும், அது ஒரு பூனை என்பதை தெரிந்ததும் நீதிமன்றத்தில் சிறிய நகைச்சுவையான தருணமாக மாறியது. இந்த வழக்கின் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
Indian Wife has filed 498a on husband claiming the husband cares for his pet cat more than her and the cat has scratched her multiple times. Even pic of the cat is included in chargesheet 🤣 pic.twitter.com/tue01mCuvK
— Ambar (@Ambar_SIFF_MRA) April 29, 2025
இதையடுத்து, சமூக ஊடகங்களில் பலரும் நகைச்சுவையுடன் பதிலளித்து, “பூனைகளும் இப்போது 498A வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளன” என்று கிண்டலாகக் கூறினர். கடந்த ஆண்டு போபாலில் ஏற்பட்ட அங்கு ஒரு தம்பதியினர் நாய்களின் மீது மனைவி மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் 30 வருட திருமணத்திற்கு பின் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர். இவற்றால், செல்லப்பிராணிகளும் இன்று குடும்ப உறவுகளில் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்குக் காரணமாகின்றன என்பது தெளிவாகிறது.