
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவை
- மீனவர்களுக்கு மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படும்
- இந்திய பெருங்கடல் நோக்கி செல்வதற்கு வழிவகை செய்யும் பொருட்கள் தங்கச்சி மடத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
- 15,300 மீனவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்க 20.57 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- மீனவர்களுக்கு பயிற்சி அளித்து 52.33 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
- வலை பின்னுதல் படகு பழுதுபார்த்தல் வண்ண மீன் தொட்டி தயாரிப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.
- 7000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா படகு இயக்குதல், காளான் வளர்ப்பு ஆகியவைக்கு 14000 பயனாளிகளுக்கு 53 கோடியில் பயிற்சி அளிக்கப்படும்.
- மேற்கூறிய திட்டங்களை கண்காணித்து ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்படும்