
தென்காசி மாவட்டம் சுரண்டையில் மானசா என்ற மாணவி 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி வகுப்பறையிலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.