உத்திரபிரதேச மாநிலத்தில் பிரக்யாஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஒரே நாளில் உலகம் அறியும் அழகியாக முத்திரை பதித்தவர் மோனாலிசா. இவர் மகா கும்பமேளாவில் பூமாலைகள் மற்றும் மணி மோதிரங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது இவரின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் தேசிய அளவில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து சனோஜ் மிஸ்ரா “தி டைரி ஆஃப் மணிப்பூர்” என்ற திரைப்படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்தார். இதற்கு மோனலிசாவும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் சனோஜ் மிஸ்ரா மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

இது பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மோனலிசாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மோனாலிசா அழுது கொண்டிருக்க அவரை சுற்றி இருந்த குடும்பத்தினர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மோனாலிசாவின் கண்ணீரை அவரது  குடும்ப உறுப்பினர்கள் துடைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சனோஜ் மிஸ்ரா பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை நினைத்து தான் மோனாலிசா அழுததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Mona lisa பதிவைப் பகிர்ந்துள்ளார் (@monalisakumbhmela)