
மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் மற்றும் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின் பாதிப்பு பெரிதளவில் காணப்படுகிறது .
அதாவது மியான்மர் பகுதியில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11:50 மணிக்கு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிடங்களில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதோடு நைபிடாவில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து கிங் சுலலொங்கார்ன் நினைவு மருத்துவமனை மற்றும் BNH மருத்துவமனையிலிருந்து நோயாளிக்கு வீல் சேர்களில் அருகில் உள்ள பூங்காவுக்கு இடம் மாற்றப்பட்டனர்.
Footage during the earthquake in #Bangkok a baby was born in the park 😭 Waht a story to tell ‘’ I was born during the earthquake ‘’ #แผ่นดินไหว #earthquake #myanmarearthquake #bangkokearthquake #ตึกถล่ม pic.twitter.com/7E0FdzfPEf
— Miia 🩵 (@i30199) March 28, 2025
அந்த நேரத்தில் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவ ஊழியர்கள் உதவியுடன் ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு செல்லப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு வலி ஏற்பட்டதால் தெருவில் குழந்தையை பெற்றெடுத்தார் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தாய்லாந்து பிரதமர் பாய்டொங்க்தர்ன் ஷினவித்ரா உடனடியாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி நிலநடுக்க பாதிப்பு பெரிதாக இருக்கக்கூடிய பகுதிகளில் அவசரநிலை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.