இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் களில் பணம் எடுப்பதற்கு தற்போது கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. பொதுவாக வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம்களில் சென்று பணம் எடுப்பார்கள். அதன்படி பணம் எடுப்பதற்கு மற்றும் ஸ்டேட்மென்ட் வாங்குவதற்கு போன்ற சேவைகளுக்கு ஒரு மாதத்திற்கு 5 முறை ஏடிஎம் இயந்திரத்தை இலவசமாக பயன்படுத்தலாம்.

ஆனால் அதற்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்க நேரிடும். அதன்படி 5 தடவைக்கு மேல் ஒவ்வொரு முறையும் பண பரிவர்த்தனை செய்யும் போது தலா 21 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டணத்தை தற்போது ரிசர்வ் வங்கி உயர்த்தி 23 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு மே மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.