
நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சீசன் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தலைமையில் ஐபிஎல் 2025 ஏற்கனவே பிரமாண்டமான விழாவுடன் தொடங்கியது. ஷாருக்கானைத் தவிர, பாலிவுட் நட்சத்திரம் திஷா பதானி, பாடகி ஸ்ரேயா கோசல் மற்றும் பஞ்சாபி பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இதில் பெங்களூரு அணி வெற்றியை கைப்பற்றியது.
இதனையடுத்து நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி சென்னை அணி வெற்றியை கைப்பற்றியது. இதில் இசையமைப்பாளர் அனிருத் சேப்பாக்கத்தில் CSK vs MI போட்டியை பாட்டுப் பாடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இப்போட்டியில் பாட்டு பாடியது குறித்து Lifetime Settlement Unlocked என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Lifetime settlement unlocked ❤️ #7 pic.twitter.com/nTdMSTiN5Z
— Anirudh Ravichander (@anirudhofficial) March 24, 2025