உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியில் ஆர்.கே. தோமர் என்பவர் தனது நாயுடன் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் ஆர்.கே. தோமரின் தங்கச் சங்கிலியை  பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தோமர் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.

இந்த காட்சிகள் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அப்பகுதி மக்கள் உடனடியாக அவருக்கு உதவி செய்தனர். தற்போது அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.