நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2015ஆம் ஆண்டு வெளியான “நானும் ரௌடி தான்” படப்பிடிப்பின்போது ஒருவரையொருவர் காதலித்தார்கள். நீண்ட நாட்கள் காதலில் இருந்த பிறகு, 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு அதே ஆண்டில் அவர்கள் இரட்டைக் குழந்தைகளான உயிர் மற்றும் உலகம் ஆகியோரை வாடகைத்தாய் முறையில் பெற்றனர். இப்போது, இந்த ஜோடியின் காதல் உறவு வெற்றி பெறும் விதமாக பத்து ஆண்டுகளை கடந்துள்ளது.

தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் நயன்தாரா பல்வேறு பிஸினஸ்களை செய்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னை வீனஸ் காலனியில் 7000 சதுர அடி பரப்பளவில் பங்களா ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Architectural Digest India (@archdigestindia)