
சென்னை ஈசிஆர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில், சென்டர் ஆக்சிஸ் ரைடில் ஏற்பட்ட கோர விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காடு அருகே உள்ள இந்த பூங்காவில் தினமும் ஏராளமான மக்கள் வந்து பொழுதுபோக்கின்றனர். இதுபோன்ற ரைடுகளில் மகிழ்ச்சியுடன் மக்களும் குழந்தைகளும் ஈடுபடுவதும் வழக்கம். ஆனால், இப்போது அங்கு பயங்கரமான விபத்து நேரிட்டுள்ளது. கேரிபியன் கிங் என அழைக்கப்படும் ராட்சத கப்பல் ரைடில் பயணித்திருந்த இரண்டு கல்லூரி மாணவிகள், எதிர்பாராத விதமாக, மேலிருந்து விழுந்த இரும்பு கப்பால் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
தலையில் காயம் – மருத்துவமனையில் அனுமதி
அந்த ரைடு வேகமாக மேலும் கீழுமாக இயங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு பெரிய இரும்பு கப் பயணிகளுக்கு மேல் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவிகள் இருவரும் தலையில் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது தலையில் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்ய ஸ்கேன் செய்யப்பட்டது. காயமடைந்தவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும், இந்த சம்பவம் பொழுதுபோக்கு பூங்காவின் பாதுகாப்பு முறைமைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பூங்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறி – பராமரிப்பு சரியாக செய்யப்படுகிறதா?
இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், பூங்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. பொதுமக்கள், “இத்தகைய ரைடுகளில் போதிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா?” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். பூங்காவின் மேலாளர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து எந்த பதிலும் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இந்த சம்பவம் பொழுதுபோக்கு பூங்காக்களில் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது.
Video from MGM amusement park , Chennai . Two college girls got injured due to malfunction . Looks like no complaint was registered . pic.twitter.com/26b9NwHAv8
— Prashanth Rangaswamy (@itisprashanth) March 13, 2025