
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. அப்போது திமுக எம்பிக்கள் தமிழ்நாடு கல்வி நிதி மறுப்பு விவகாரம் ஈடுபட்டனர். அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியதாவது, பாஜக ஆளாக மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டது.
தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் ஜனநாயக விரோதமானவர்கள் என்று கூறியுள்ளார்.