
நடிகர் நந்தா பேட்டி ஒன்றில், “சன் டிவி தெலுங்குல ஒரு ரியாலிட்டி ஷோ இருப்பதாகவும் அதை தமிழ்ல பண்ண வேண்டுமென்றும் சொன்னாங்க. இந்த நிகழ்ச்சி பற்றிச் சொன்னதும் விஷால் சரின்னு சொல்லிட்டாரு. அவருதான் ஆங்கர். தமிழ்ல ‘நாம் இருவர்’னு அந்த நிகழ்ச்சியை பண்ணினோம். கார்த்தி, கீர்த்தி சுரேஷ், எஸ்ஜே.சூர்யா எல்லாரும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தாங்க. அதனால இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வந்தது.
நாளைக்கு உயிரோடு இருப்போமா இல்லையா என்ற ஒரு நிலையில் அடிமட்டத்தில் இருக்கிறவர்களுக்கு அவங்க நிலையை மாற்றனும். அவங்களுக்காக உதவுவதற்கு யாருமே இல்லை. அதுக்காக நாங்கள் நிறைய கதையை தயார் பண்ண வேண்டியது இருந்தது. 13 பேருக்கு உதவி செய்கிறோம். இன்னும் 365 அப்ளிகேஷன் வந்திருக்கிறது. இந்த ஷோவில் பெரிய திருப்தி என்ன என்றால் இன்னைக்கு வரைக்கும் அந்த 13 குடும்பங்களும் நல்லா இருக்காங்க. அந்த குழந்தை இன்னைக்கு காலேஜ் படிக்கிறாங்க. ஒரு அம்மாவும் இரண்டு பொண்ணும் வந்திருந்தாங்க.
அப்போ எஸ் ஜே சூர்யா சார் சொன்னாங்க. இந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகுற வரைக்கும் நான் மாசம் 50000 கொடுக்கிறேன் என்று. அந்த ஷோவில் பிராமிஸ் பண்ணினார். அந்த ஷோ முடிந்து 5 வருடம் ஆகிடுச்சு. இன்று வரைக்கும் மாதம் 50 ஆயிரம் அந்த குடும்பத்துக்கு கொடுக்கிறார். அது யாருக்குமே தெரியாது. இன்னைக்கு வரைக்கும் அவர் அனுப்பியதை எனக்கு ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்புவார். எல்லாரும் மேடையில் ஆயிரம் பேசுவாங்க. ஆனா நிஜத்தில் அதை செய்ய மாட்டாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா எஸ் ஜே சூர்யா சொன்னதை சொன்ன மாதிரி இன்று வரைக்கும் செய்கிறார். அது மிகப்பெரிய விஷயம். ஒரு குடும்பத்தையே வாழ வைக்கிறது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது” என்று கூறினார்.