ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்தரா 108 ரன்களும் வில்லியம்சன் 102 ரன்‌களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் லுங்கி என்கிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் சதம் அடித்தார். இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இதனால் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன் மோதுகிறது.