
இந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர கியாரா அத்வானி. இவர் 2014இல் வெளிவந்த கபீர் சதானந்த் இயக்கிய புக்லி என்ற நகைசுவையோ திரைப்படத்தில் அறிமுகமானார். நடிகர் ராம் சரண் உடன் “வினயா வித்யா ராமா” என்ற ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். இதற்கிடையில் இவர் பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து வந்தார்.
இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் அண்மையில் இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரியக்கார் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தார், பிரபலங்கள் என சிலர் மட்டுமே பங்கேற்றார்கள். இந்நிலையில் கியாரா அத்வானி தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.