சாம்பியன் டிராபி தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாம் நாள் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் நிலையில் இன்று பிற்பகல் துபாயில் வங்கதேசம் மற்றும் இந்தியா மோதும் போட்டி தொடங்கியது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 229 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடியது. சுமார் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கில் 101 ரன்களுடன் ஆட்டமிளக்காமல் களத்தில் இருந்தார். மேலும் கே.எல் ராகுல் 41 ரன்கள், ரோஹித் சர்மா 41 ரன்கள் விளாசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.