ஆந்திரா மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் அம்ரித் சாய் என்ற பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் ஹுசைன் என்ற மாணவரும் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று ஹுசைன் தனது காதலியிடம் நைசாக பேசி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனையடுத்து ஹுசைனின் நண்பர் ஷேக் சாஹித் என்பவரும் வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது காதலரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஹுசைன், ஷேக் சாஹித், இவர்களுக்கு உடந்தையாக இருந்த சிந்தல் பிரபு ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.