
தமிழ் திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி. இவர் இசைஞானி இளையராஜாவின் மகள். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் இளையராஜாவின் இசையில் பாரதி படத்தில் “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலுக்கு தேசிய விருதை பெற்றவர். மேலும் இசையமைப்பாளர்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
இந்த நிலையில் மறைந்த பாடகி பவதாரணியின் பிறந்தநாள் இன்று. இதனை நினைவு கூறும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில்,”ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி!”என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.