மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் யானை ஒன்று திடீரென நுழைந்து கடுமையாக அட்டகாசம் செய்தது. அட்டகாசம் செய்த அந்த யானையை கிராம மக்கள் ஜேசிபி மூலம் விரட்ட முயற்சித்தனர். ஆனால் அந்த யானை ஜேசிபியை அப்படியே தூக்கி விட்டது.

இதைத்தொடர்ந்து அருகில் இருந்த கட்டிடத்தை யானை இடிக்க முயன்றது. ஆனால் அதற்கு காயம் ஏற்பட்டதால் பின்னர் அங்கிருந்து வேறு வழியின்றி சென்றது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.