விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவும், அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமாரும் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விதிமுறைகளை மீறியதாக திருமாவளவன் ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.

இந்த நிலையில் நிர்மல் குமாரும், ஆதவ் அர்ஜுனாவும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவில் முக்கிய பொறுப்பும், நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்ப அணி முக்கிய பொறுப்பும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. முன்னதாக ஆதவ் விஜய் நேரில் சந்தித்து 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்திய பிறகு கட்சியில் இணைந்துள்ளார்.