சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் எம்.பி-யாக காந்தி சிதம்பரம் உள்ளார். இவர் புதுக்கோட்டையில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சீனாயில் AI கருவிகள் உருவாக்குகின்றனர். அது உலகத்தையே உலுக்குகிறது. ஆனால் நாம் இன்னும் மலை மீது ஏறி, இங்கு அந்த சாமி உள்ளது, இந்த சாமி உள்ளது என்று கூறுகிறோம். பெரியார் குறித்த சர்ச்சையும் தேவையில்லாதது தான். மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் பொருளாதாரம், வேலையின்மை போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

ஆனால் என்ன உணவு சாப்பிட வேண்டும், தனிமனித உரிமைகள் இவை எல்லாம் சர்ச்சையாகிறது. நம்முடைய அரசியல் மேடை போகும் திசை மிகவும் வருத்தம் அளிக்கிறது. விஞ்ஞான ரீதியான அறிவுப்பூர்வமான பொருளாதார விவாதம் நடக்காமல் இருப்பது மிகுந்த  வேதனையாக இருக்கிறது. திரைப்படத்தில் கவுரவ தோற்றம் போல் அரசியலில் விஜய் வந்து செல்கிறார். பாஜக யாரையாவது வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறது. அதை தவிர யாரும் விரும்பி போய் சேர்வது கிடையாது. அவர்களுடன் கூட்டணி வைத்தால் கூட்டணிக் கட்சியின் வாக்கு வங்கியும் குறையும் என்பது உண்மை என்று கூறினார்.