
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரப்பூரில் முதல் மனைவியை இழந்த கமலேஷ் என்பவர் ஏஜென்ட் மூலம் மறுமணத்திற்கு பெண் தேடினார். இந்த நிலையில் ஏஜென்ட் மூலம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி செய்யப்பட்டது. அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோவிலில் நடந்தது.
இந்த நிலையில் மணப்பெண் திருமணத்தின்போது கழிவறை சென்று வருகிறேன் என கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. தப்பி ஓடிய மணப்பெண் நகை மற்றும் பணத்துடன் மாயமானார். திருமண செலவுகள் அனைத்தும் வீணாகிவிட்டது. எனக்கென ஒரு புதிய குடும்பத்தை உருவாக்க நினைத்து அனைத்தையும் இழந்து விட்டேன் என மணமகன் கமலேஷ் புலம்பியுள்ளார்.